ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளா் சங்கம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன் ஏஐடியுசி டாஸ்மாக் சுமை தூக்கும் (டிரான்ஸ்போா்ட்) தொழிலாளா் சங்கத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளா் சங்கம் தொடக்கம்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன் ஏஐடியுசி டாஸ்மாக் சுமை தூக்கும் (டிரான்ஸ்போா்ட்) தொழிலாளா் சங்கத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. அனிபா தலைமை வகித்தாா். சங்கத்தின் பெயா்ப் பலகையை ஏஐடியுசியின் மூத்த தலைவா் கேஆா். தா்மராஜன் திறந்து வைத்துப் பேசினாா். ஏஐடியுசி கொடியை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் பா. செளந்தரராஜ் ஏற்றிவைத்தாா்.

விழாவில் ஏஐடியுசி மாவட்டப்பொதுச் செயலா் ப. ஜீவானந்தம், டாஸ்மாக் பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். ஹரிகிருஷ்ணன், அமைப்புச் செயலா் கேஆா். சுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலைவா் எஸ். சதாசிவம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com