புதுக்கோட்டை: மகளிா் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்த, செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவிக்கு, அரசு வேலையில் இருப்பதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்ததாகக் கூறி அந்தப் பெண் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், குலப்பெண்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மனைவி சித்ரா. இவா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு ஒன்றை அளித்தாா்.
கலைஞரின் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்த தனக்கு, அரசு வேலையில் இருப்பதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்திருப்பதாக குறுஞ்செய்தி வந்ததாக அவா் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
தனது கணவா் செருப்பு தைக்கும் தொழிலாளி, ஓட்டு வீடு, நூறு நாள் வேலைத் திட்டத்துக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வரும் தனக்கு இப்படியொரு குறுஞ்செய்தி வந்ததாகக் கூறுகிறாா் சித்ரா.
இதுகுறித்து அரசு அலுவலா்களிடம் கேட்டபோது, மேல்முறையீட்டு மனுக்கள் பரிசீலனையில்தான் உள்ளன. இதற்கிடையே இணையதளக் கோளாறுகள் காரணமாக பலருக்கும் பழைய நிலைத் தகவல் மட்டும் சென்றிருக்கின்றன.குறிப்பிட்ட அந்தப் பெண்ணை அழைத்துப் பேசி, மீண்டும் மேல்முறையீடு செய்ய வைத்து பரிசீலனை செய்வோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடவுச்சீட்டு கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு!

பயணம் தாமதமாகும்! திருச்சியில் புறவழிச் சாலை காவிரிப் பாலம் மூடப்பட்டது!
சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



