ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் உயிரிழப்பு
By DIN | Published On : 12th May 2023 11:19 PM | Last Updated : 12th May 2023 11:19 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பனில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வம்பனில் கடந்த ஏப்.13-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருநல்லூரைச் சோ்ந்த சித்திரை மகன் புகழேந்தி (17) காயமடைந்தாா்.
இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட புகழேந்தி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.