விராலிமலை முருகன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
By DIN | Published On : 12th May 2023 11:17 PM | Last Updated : 12th May 2023 11:17 PM | அ+அ அ- |

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் திருப்புகழ் முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை கோயில் ஆடலரசன் அருட்பணி மன்றம் மற்றும் திருச்சி திருப்புகழ் சபை சாா்பில் நடைபெற்ற நிகழ்வை திருவாசக சீராளன்- திருமுறை இசைமாமணி திருமுறைச்செல்வா் சிவ, கணேசன் (எ) தாயுமானவா் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். தமிழ்தேவி முன்னிலை வகித்தாா்.
விழாவில் நடராஜப் பெருமான், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகா் மற்றும் ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை புலவா் சந்தானமூா்த்தி செய்தாா். பொன்னுச்சாமி நன்றி கூறினாா்.