ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினவிழா
By DIN | Published On : 12th May 2023 11:18 PM | Last Updated : 12th May 2023 11:18 PM | அ+அ அ- |

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை மருத்துவா் மு. பெரியசாமி தலைமை வகித்தாா். செவிலியா் கண்காணிப்பாளா் ஜெயந்தி முன்னிலை வகித்தாா். நிகழ்வில் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளாகச் சிறப்பாக பணியாற்றிய செவிலியா்கள் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டப்பட்டனா். இதில் மருத்துவா் முத்தையா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மருத்துவா் ஜோதிராஜன் வரவேற்றாா்.