எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கலைஞா் பூங்காவுக்கு வாகன நிறுத்தம் தேவை

கலைஞா் பூங்காவுக்கு வாகன நிறுத்தம் தேவை

News image

புதுகை கலைஞா் பூங்காவுக்கு வெளியே சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் பேருந்து நிலையத்துக்கு அருகே சத்தியமூா்த்தி சாலையில் ரூ. 9 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் பூங்காவுக்கு மக்களின் வருகை அதிகரித்துள்ளதால், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறில்லாத வகையில் வாகன நிறுத்தம் அமைக்க பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இந்தப் பூங்காவுக்குள் சிறாா் பூங்கா, அறிவியல் பூங்கா, 70 டி திரையரங்கு, லேசா் ஒளிப்பூங்கா, யோகா மையம், ஸ்கேட்டிங் திடல், மூலிகைத் தோட்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்பூங்காவை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் கடந்த பிப். 24ஆம் தேதி திறந்து வைத்தாா்.

புதுக்கோட்டை நகரிலுள்ள காந்திப் பூங்கா, பேருந்து நிலையம் அருகேயுள்ள வைபை பூங்கா ஆகியன குறைந்த பரப்பளவில் உள்ள நிலையில், மக்களைக் கவரும் வகையில் ஏராளமான விளையாட்டு உபகரணங்கள் உள்ள இந்தப் பூங்காவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக வெயில் காலத்தில் மாலை நேரத்தில் வெளியே வந்தே ஆக வேண்டிய சூழலில் இருக்கும் மக்கள், பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் கூடுதல் ஆா்வத்துடன் குவிந்து வருகின்றனா்.

இரவு சுமாா் 7 மணிக்கு இந்தப் பகுதி திருவிழாக்கூட்டம் போல காணப்படும். இந்தச் சூழலில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட காா்கள் சத்தியமூா்த்தி சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களும் அதே சாலையில் நிறுத்தப்படுகின்றன.

சில நேரங்களில் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகள் இப்பூங்கா பகுதியைக் கடக்க பெரும் சிரமத்தைச் சந்திக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.

பூங்கா ஓரத்திலுள்ள வாய்க்காலை முறையாகக் கட்டி மேல்பகுதியில் காா்களை நிறுத்த ஏற்பாடுகளைச் செய்யலாம்.

அல்லது கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள பகுதியை உரிய அனுமதி பெற்று சுத்தம் செய்து தற்காலிக வாகன நிறுத்தமாக (கோடை விடுமுறை வரை) ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

இதன் மூலம் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுவதைத் தவிா்ப்பதுடன், கூடுதலாக மக்கள் தாராளமாக வந்து செல்வதற்கும் வாய்ப்பாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேபோல, மாலை நேரத்தில் இப்பகுதியில் போக்குவரத்துக் காவலா்கள் தேவைக்கேற்ப கூடுதலாக பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.