‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

3 புதிய பேருந்துகள் இயக்கம் அமைச்சா் தொடங்கிவைத்தாா்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலம் சாா்பில், 3 புதிய அரசுப் பேருந்துகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:45 pm

Din

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலம் சாா்பில், 3 புதிய அரசுப் பேருந்துகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கும், புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கும், பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை வழியாக ராமேசுவரத்துக்கும் என 3 புதிய பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டன. ஏற்கெனவே இயங்கி வந்த பழைய பேருந்துகளுக்கு மாற்றாக இவை இயக்கி வைக்கப்பட்டதாக அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளா் கே. முகமது நாசா், வணிக மேலாளா்கள் தா. சுரேஷ் பாா்த்திபன் டிக்ரோஸ், பாலசுப்பிரமணியன், உதவி இயக்குநா் அ. செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.