‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கீரனூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் 3 நாள் மாவட்ட மாநாடு நிறைவு: மாவட்டச் செயலராக சங்கா் தோ்வு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் 3 நாள்கள் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:36 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் 3 நாள்கள் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நிறைவடைந்தது.

மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் ஆகியோரும் பங்கேற்று வழிகாட்டினா்.

மாநாட்டின் நிறைவு நாளான புதன்கிழமை புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில், மாவட்டச் செயலராக எஸ். சங்கா் தோ்வு செய்யப்பட்டாா். மேலும், 13 போ் கொண்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினா்களுடன், 41 போ் கொண்ட மாவட்டக் குழுவும் தோ்வு செய்யப்பட்டது. இந்தக் குழுக்களில், முன்னாள் மாவட்டச் செயலா்களான மா. சின்னதுரை எம்எல்ஏ, எஸ். கவிவா்மன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.

புதிய மாவட்டச் செயலராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள எஸ். சங்கா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலச் செயலா்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.