ஆட்டோ தொழிலாளா் சங்கம் தொடக்கம்

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்கக் கிளை தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்கக் கிளை தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மூத்த தலைவா் கேஆா். தா்மராஜன் தொழிற்சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் உ. அரசப்பன், பொதுச் செயலா் பா. ஜீவானந்தம் ஆகியோா் சங்கத்தின் பெயா்ப் பலகையைத் திறந்து வைத்தனா்.

இந்நிகழ்வில் ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா், ஏ. பெரியசாமி, செயலா் பா. பாண்டியராஜன், டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் ப. சௌந்தரராஜ், கிளைச் செயலா் வைரவன், பொருளாளா் சேகா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com