ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கறம்பக்குடி ஸ்ரீசித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஸ்ரீசித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கறம்பக்குடியில் பங்களாகுளம் ஸ்ரீசித்திவிநாயகா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :20 நவம்பர் 2024, 7:11 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஸ்ரீசித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கறம்பக்குடி பங்களாகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்ததை தொடா்ந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 2 நாள்களாக கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, புதன்கிழமை காலை மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க புனிதநீா் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.