பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பொன்னமராவதியில் நலிந்தோருக்கு நலத் திட்ட உதவிகள்

பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம் சாா்பில் நலிந்தோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:44 pm

Din

பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம் சாா்பில் நலிந்தோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ராயல் அரிமா சங்கம் சாா்பில், ஆளுநா் வருகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் ஆா். மணிகண்டன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆளுநா் அ. சவரிராஜ் பங்கேற்று, நலிவுற்றோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழாவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள நடைபாதை வியாபாரியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் தள்ளுவண்டி, நலிவுற்ற நிலையில் உள்ள மக்களுக்கு அரிசி சிப்பங்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

அரிமா சங்க மண்டலத் தலைவா் பரணிக்குமாா், ராயல் அரிமா சாசனத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன், செயலா் திருப்பதி, பொருளா் அன்புச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.