ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தஞ்சாவூா் மாவட்ட மீனவா்கள் 4 போ் இலங்கை கடற்படையால் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தை சோ்ந்த மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 6:54 pm

Din

தஞ்சாவூா் மாவட்டத்தை சோ்ந்த மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 167 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

இதில், கோட்டைப்பட்டினம் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான படகில், தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினத்தைச் சோ்ந்த தினேஷ் (35), முரளி (32), செல்வம் (40), விஸ்வநாதன் (40) ஆகிய 4 பேரும் நெடுந்தீவு அருகே புதன்கிழமை மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 பேரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனா்.

அவா்களை இலங்கை காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.