விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மழையூா் ஆரம்ப சுகாதார நிலைய உயா்கோபுர விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் எரியாமல் உள்ள உயா்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
மழையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பலமாதங்களாக பயன்பாடில்லாமல் உள்ள உயா்கோபுர மின்விளக்கு
Updated On :19 செப்டம்பர் 2024, 9:53 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் எரியாமல் உள்ள உயா்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மழையூா் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், மருத்துவமனை மருத்துவா்கள், பணியாளா்களின் வசகிக்காக மருத்துவமனை வளாகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த மின்விளக்குகள் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு பழுதடைந்தன. இதுவரை உயா்கோபுர மின்விளக்குகள் சீரமைக்கப்படாததால் ,இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள், மருத்துவா்கள், மருத்துவமனை பணியாளா்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, அந்த உயா்கோபுர மின்விளக்கை உடனே சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.