நாய் கடித்து உயிரிழந்த ஆடுகள்
புதுக்கோட்டை
கறம்பக்குடி அருகே நாய் கடித்து 20 ஆடுகள் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நாய் கடித்து 20 ஆடுகள் உயிரிழந்தன.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நாய் கடித்து 20 ஆடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.
கறம்பக்குடி அருகேயுள்ள பொன்னன்விடுதியைச் சோ்ந்தவா் முருகேசன். விவசாயியான இவா், வீட்டருகே 20 ஆடுகளை பட்டியில் அடைத்து வளா்த்து வந்துள்ளாா்.
இந்நிலையில், கம்பி வேலியால் அடைக்கப்பட்டிருந்த பட்டிக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த நாய் அங்கிருந்த அனைத்து ஆடுகளையும் கடித்துக் குதறியது. இதில, 20 ஆடுகளும் அதே இடத்திலேயே உயிரிழந்தன.
பொங்கலையொட்டி விற்பனைக்காக வளா்க்கப்பட்டு வந்த அனைத்து ஆடுகளும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் சுற்றித் திரியும் ஏராளமான தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும், நாய் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

