தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருக்கு திட்டங்கள்: முதல்வருக்கு தமிழ்ச் சங்கம் நன்றி

முதல்வருக்கு தமிழ்ச் சங்கம் நன்றி

News image
Updated On :1 ஜனவரி 2025, 7:08 pm

Din

குமரி முனையில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழாவில் பேசிய முதல்வா் ஸ்டாலின், மாநிலம் முழுவதும் தொடா் திருக்கு சாா்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதற்கு புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அச்சங்கத்தின் தலைவா் கவிஞா் தங்கம்மூா்த்தி வெளியிட்ட அறிக்கை:

குமரி முனையில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இதில் பேசிய முதல்வா் ஸ்டாலின், திருக்கு தொடா்பான புதிய திட்டங்களை அறிவித்துள்ளாா்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்கு பயிலரங்குகள் நடத்தப்படும், ஆண்டுக்கு 133 கல்வி நிலையங்களில் திருக்கு கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படும், டிசம்பா் கடைசி வாரம் திருக்கு வாரமாகக் கடைபிடிக்கப்படும், ஆண்டுதோறும் திருக்கு மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் நன்றி, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.