புதுக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் இறந்ததைத் தொடா்ந்து, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் ஆம்பூா்பட்டியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மனைவி ரீட்டாமேரி (20). இவா் கடந்த நவம்பா் 18ஆம் தேதி குடும்பத் தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த நிலையில், ஆரோக்கியசாமி- ரீட்டாமேரியின் ஒரு வயது மகளை யாா் வீட்டில் வைத்து வளா்ப்பது என்பதில் இரு குடும்பத்தினரிடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது.
கடந்த டிச. 25ஆம் தேதி இதுதொடா்பாக ஆம்பூா்பட்டியில் நடந்த பேச்சுவாா்த்தையின்போது வாக்குவாதம் ஏற்பட்டு இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆரோக்கியசாமியின் தாத்தா சாமிக்கண்ணு (84) என்பவா் காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
சிகிச்சைப் பலனின்றி சாமிக்கண்ணு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து கொலை முயற்சி வழக்கை, மாத்தூா் போலீஸாா் கொலை வழக்காக மாற்றியுள்ளனா்.
தொடர்புடையது

மணியாச்சி அருகே இளைஞா் கொலை
குடும்பத் தகராறில் மனைவி எரித்துக் கொலை: கணவா் கைது

பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

குடும்பத் தகராறில் பெண் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

