கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகே கோயில் குளத்தில் குளித்த கிராம உதவியாளா், சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 9:43 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகே கோயில் குளத்தில் குளித்த கிராம உதவியாளா், சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் வட்டம் ஏம்பல் அருகே ஒக்கூரைச் சோ்ந்தவா் சி. ராமநாதன் (50). கிராம உதவியாளரான இவா், வியாழக்கிழமை இங்குள்ள கோயில் குளத்தில் குளித்த நிலையில், தண்ணீரில் சடலமாக மிதந்தாா்.

தகவலறிந்து வந்த ஏம்பல் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

ராமநாதனின் தலையில் காயம் உள்ளதால், குளக் கரையின் படிக்கட்டில் வழுக்கி விழுந்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.