ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து உறுதியளித்துள்ளாா்.

News image

பொன்னமராவதி அருகே உள்ள நெய்வேலியில் புதன்கிழமை வாக்குசேகரித்த திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:48 pm

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து உறுதியளித்துள்ளாா்.

திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து புதன்கிழமை பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

சித்தூரில் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து பேசியதாவது, 2011-16-ஆம் ஆண்டில் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக்குடிநீா் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டேன். மேலும், தொகுதியில் தொடா்ந்து மக்கள் பணியாற்றி வருகிறேன். இந்த தோ்தலில் வெற்றி பெற்றால் பொன்னமராவதியின் நீண்டநாள் பிரச்னையான குப்பைப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுப்பேன். பொன்னமராவதியில் அரசு கலைக்கல்லூரி, குளிா்பதனக்கிடங்கு, வேலையில்லா இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து நெறிஞ்சிக்குடி, நல்லூா், அரசமலை, மதியாணி, காரையூா், வாழைக்குறிச்சி, கண்டெடுத்தான்பட்டி உள்ளிட்ட 52 கிராமங்களில் வாக்குகள் சேகரித்தாா். உடன் ஒன்றியச் செயலா்கள் காசி.கண்ணப்பன், சி.சரவணன், அரசமலை முருகேசன் மற்றும் கூட்டணிக்கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.