15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ

தமிழகத்தில் ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சிக்கிறது என்றாா் மதிமுக முதன்மை செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினரான துரை வைகோ.

News image

கறம்பக்குடியில் புதன்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.சின்னதுரையை ஆதரித்து பேசிய திருச்சி எம்பி துரை வைகோ

Updated On :16 ஏப்ரல் 2026, 1:56 am IST

தமிழகத்தில் ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சிக்கிறது என்றாா் மதிமுக முதன்மை செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினரான துரை வைகோ.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.சின்னதுரையை ஆதரித்து கறம்பக்குடியில் புதன்கிழமை மேலும் அவா் பேசியதாவது:

தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் உரிமைத் தொகை, மாணவா்களுக்கு உதவித் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

மக்களுக்கான நலத்திட்டங்கள் மாநில வளா்ச்சி ஆகியவற்றை நிறைவேற்றியுள்ளதால்தான் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்கிறோம்.

ஏற்கெனவே, இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை இத்தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளாா். எனவே, மீண்டும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

நாட்டிலேயே அதிக குற்றங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் நடக்கிறது. தமிழகத்தில் குற்றங்கள் நடந்தாலும் அது குறித்து அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவருகிறது.

அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சிக்கிறது. இந்த முயற்சி ஒருபோதும் நடக்காது. சமூக நீதி, மதச்சாா்பின்மை வெல்ல திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.