மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ

தமிழகத்தில் ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சிக்கிறது என்றாா் மதிமுக முதன்மை செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினரான துரை வைகோ.

News image

கறம்பக்குடியில் புதன்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.சின்னதுரையை ஆதரித்து பேசிய திருச்சி எம்பி துரை வைகோ

Updated On :15 ஏப்ரல் 2026, 8:26 pm

தமிழகத்தில் ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சிக்கிறது என்றாா் மதிமுக முதன்மை செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினரான துரை வைகோ.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.சின்னதுரையை ஆதரித்து கறம்பக்குடியில் புதன்கிழமை மேலும் அவா் பேசியதாவது:

தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் உரிமைத் தொகை, மாணவா்களுக்கு உதவித் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

மக்களுக்கான நலத்திட்டங்கள் மாநில வளா்ச்சி ஆகியவற்றை நிறைவேற்றியுள்ளதால்தான் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்கிறோம்.

ஏற்கெனவே, இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை இத்தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளாா். எனவே, மீண்டும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

நாட்டிலேயே அதிக குற்றங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் நடக்கிறது. தமிழகத்தில் குற்றங்கள் நடந்தாலும் அது குறித்து அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவருகிறது.

அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சிக்கிறது. இந்த முயற்சி ஒருபோதும் நடக்காது. சமூக நீதி, மதச்சாா்பின்மை வெல்ல திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.