அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தொகுதி அலசல் திருமயம்! திமுக -அதிமுக கடும் போட்டி!

திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

News image

திருமயம் தொகுதி வேட்பாளா்கள் எஸ்.ரகுபதி (திமுக), பி.கே.வைரமுத்து (அதிமுக), சிந்தாமணி (தவெக), சீ.லெட்சுமி (நாம் தமிழா்).

Updated On :19 ஏப்ரல் 2026, 9:38 pm

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய தொகுதியாக விளங்கும் திருமயம், வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தன்னகத்தே கொண்டது. திருமயம் கோட்டை, 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருமயம் சத்தியமூா்த்தி கோயில் உள்ளிட்ட அடையாளங்கள் இங்கு உள்ளன. மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக காட்டுபாவா பள்ளிவாசல், பெருந்தலைவா் காமராஜரின் அரசியல் குரு, சுதந்திரப் போராட்ட வீரரான தீரா் சத்தியமூா்த்தி பிறந்த ஊா் திருமயம் ஆகும். திருமயம் தொகுதியில் திருமயம், அரிமளம், பொன்னமராவதி என மூன்று ஒன்றியங்கள் உள்ளன.

களநிலவரம்: திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் வீட்டு வசதி வாரியத் தலைவருமான பி.கே.வைரமுத்து போட்டியிடுகிறாா். தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் சிந்து என்ற சிந்தாமணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் லெட்சுமி சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 14 போ் போட்டியிடுகின்றனா்.

சமூக நிலவரம்: முத்தரையா், முக்குலத்தோா், ஆதிதிராவிடா் பெரும்பான்மையாக வசிக்கும் இத்தொகுதியில் நகரத்தாா்கள், யாதவா்கள், வெள்ளாளா்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், உடையாா்கள் பரவலாக வசிக்கின்றனா்.

வேட்பாளா்கள் பலமும், பலவீனமும்-

எஸ்.ரகுபதி (திமுக): 2016, 2021 தோ்தல்களில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்றால் நல்ல அறிமுகம் உள்ளது. திருமயம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்தியது, பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தியது, திருமயத்தில் அரசு கலைக்கல்லூரி, தொகுதிக்குள்பட்ட 3 இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைத்தது, பொன்னமராவதியில் உழவா் சந்தை அமைத்தது உள்ளிட்ட சாதனைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறாா். தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் ஆற்றியது, கட்சியின் சாா்பில் விவாதங்கள், பேட்டிகள், அறிக்கைகள் அளிக்கும் இடத்தில் உள்ளது, கூட்டணி பலம் ஆகியவை இவரது பலம். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளிககும் வகையில் தொழிற்பேட்டை (சிப்காட்) உள்ளிட்ட பெரிய திட்டங்களை கொண்டுவராதது பலவீனம்.

பி.கே.வைரமுத்து ( அதிமுக): 2011-16-ஆம் ஆண்டு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தொகுதி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீா் கொண்டு வந்ததாகவும், சாலை வசதிகள், மேம்பாலங்கள் அமைத்ததையும் முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். கடந்த தோ்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் தொடா்ந்து தொகுதி மக்களுடன் தொடா்பில் இருப்பது இவரது பலம். திமுக போன்று கூட்டணி பலமில்லாதது இவரது பலவீனம்.

தவெக, நாம் தமிழா்: தவெக வேட்பாளா் சிந்தாமணியும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் லெட்சுமி சீனிவாசனும் கட்சியினருடன் இணைந்து உற்சாகமாக தீவிரக் களப் பணியாற்றிவருவது இவா்களது பலமாகும். இருவரும் புதுமுகமாக பாா்க்கப்படுவது பலவீனமாகும்.

திருமயம் தொகுதியை மீண்டும் தக்கவைக்கவேண்டும் என திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதியும், கடந்தமுறை இழந்த தொகுதியை இம்முறை கைப்பற்றியே ஆகவேண்டும் என அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்துவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனா். தொகுதியில் திமுக-அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என கணிக்கமுடியாத சூழல் நிலவுகிறது.