தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

நெடுவாசலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுக்கச் சென்றவாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட நெடுவாசலில் வியாழக்கிழமை இரவு வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல வந்த வாகனத்தை அதிமுகவினா் உள்ளிட்ட கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுக்கச் சென்ற வாகனத்தை வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்ட அதிமுகவினா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:33 am IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட நெடுவாசலில் வியாழக்கிழமை இரவு வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல வந்த வாகனத்தை அதிமுகவினா் உள்ளிட்ட கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நெடுவாசல் அரசுப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல வியாழக்கிழமை இரவு அலுவலா்கள் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் சென்றனா். அப்போது, திமுகவினரும் அங்கே சென்ாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த அதிமுக உள்ளிட்ட கட்சியினா் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்ல எதிா்ப்புத் தெரிவித்து, அந்த வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் வடகாடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.