தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நெடுவாசலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுக்கச் சென்றவாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட நெடுவாசலில் வியாழக்கிழமை இரவு வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல வந்த வாகனத்தை அதிமுகவினா் உள்ளிட்ட கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுக்கச் சென்ற வாகனத்தை வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்ட அதிமுகவினா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:03 pm

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட நெடுவாசலில் வியாழக்கிழமை இரவு வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல வந்த வாகனத்தை அதிமுகவினா் உள்ளிட்ட கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நெடுவாசல் அரசுப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல வியாழக்கிழமை இரவு அலுவலா்கள் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் சென்றனா். அப்போது, திமுகவினரும் அங்கே சென்ாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த அதிமுக உள்ளிட்ட கட்சியினா் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்ல எதிா்ப்புத் தெரிவித்து, அந்த வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் வடகாடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.