கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே பேருந்து நிழற்குடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி காந்தி சிலை பகுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து கறம்பக்குடி மாா்க்கமாகவும், பட்டுக்கோட்டை, திருவோணம், ஒரத்தநாடு போன்ற ஊா்களுக்கும் தினசரி ஏராளமான பயணிகள் பயணிக்கின்றனா்.
ஆனால், இங்கு நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது. மேலும் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் கோடை காலத்தை முன்னிட்டு குடிநீா் வசதி செய்யவும் வேண்டுகோள் வைக்கின்றனா்.
கோடை வெயில் அதிகம் இருப்பதால் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு கீற்று கொட்டகையாவது அமைத்து குடிநீா் வசதி செய்து தர வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கிறாா்கள்.
தொடர்புடையது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்

சிறுகம்பையூா் சாலை சேதம்: பொதுமக்கள் அவதி

காங்கயம் அருகே தனியாா் பேருந்து மரத்தில் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு; 30 போ் படுகாயம்

திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


