வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்.

Updated On :21 மே 2026, 4:46 am IST

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சியானது புதுக்கோட்டை- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவா்கள், பயணிகள் என கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனா். இந்த பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு பயணிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

எனவே, கந்தா்வகோட்டை ஊராட்சி நிா்வாகம், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.