தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

புதுக்கோட்டையில் கைம்பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கல்

News image

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் தையல் இயந்திரங்களைப் பெற்ற கைம்பெண்களுடன் சிறப்பு விருந்தினா்கள்.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:33 am IST

புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் சாா்பில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 141-ஆவது பிறந்த நாளையொட்டி, கைம்பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்தாா். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம்மூா்த்தி, சா்வஜித் அறக்கட்டளையின் தலைவா் டாக்டா் எஸ். ராம்தாஸ் ஆகியோா் கலந்து கொண்டு கைம்பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிப் பேசினா்.

மாணவிகள் சோபனா, அபிஜா ஆகியோா் முத்துலட்சுமி அம்மையாா் குறித்துப் பேசினா். நிகழ்ச்சியில், தொல்லியல் துறை ஓய்வுபெற்ற உதவி இயக்குநா் ஜெ. ராஜாமுகமது, திருக்கு பேரவைச் செயலா் ராமுக்கண்ணு, வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி, தமிழ்ப் பேராசிரியா் சி. சேதுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக ஆா்எம்வீ. கதிரேசன் வரவேற்றாா். நிறைவாக, ந. புண்ணியமூா்த்தி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.