பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கைதி தப்பிச் சென்ற விவகாரம் இரு காவலா்கள் பணியிடை நீக்கம்

பணியிடை நீக்கம்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

புதுக்கோட்டையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபா் தப்பிச்சென்ற சம்பவத்தில் இரு காவலா்களைப் பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

புதுக்கோட்டை மச்சுவாடி அருகே இரு வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, மதுரை மாவட்டம், பூலாம்பட்டியைச் சோ்ந்த மாசானம் என்கிற மாரிமுத்து (21) என்பவரை, மருத்துவப் பரிசோதனைக்காக கணேஷ்நகா் காவல்நிலைய முதல்நிலைக் காவலா் மனோஜ்குமாா், காவலா் காா்த்திக் ஆகியோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றனா்.

அப்போது, அவா்களின் பிடியில் இருந்து மாசானம் தப்பிச் சென்றாா். அவரை பிடிப்பதற்காக திருப்பூா் மற்றும் சொந்த ஊரான மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் போலீஸாா் சென்றுள்ளனா்.

இந்நிலையில், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக, மனோஜ்குமாா், காா்த்திக் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.