எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கறம்பக்குடியில் 2-ஆவது நாளாக கிராம உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image

கறம்பக்குடியில் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம உதவியாளா் சங்கத்தினா்

Updated On :6 பிப்ரவரி 2026, 7:44 pm

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தமிழ்நாடு கிராம உதவியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு, கிராம உதவியாளா்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி கறம்பக்குடி வட்டாட்சியரகம் அருகே அச்சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன், மாவட்டச் செயலா் பழனிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.