அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வருவாய்த்துறையினா் காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் அருகே 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 7-ஆவது நாளாக

News image
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினா்.
Updated On :2 மார்ச் 2026, 9:54 pm

Syndication

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் அருகே 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 7-ஆவது நாளாக திங்கள்கிழமை வருவாய்த்துறையினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில்

நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் அ.ரமேஷ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் அ.ஏழுமலை, தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியா் சங்க மாநில அமைப்புச் செயலா் பெருமாள், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ரகுபதி மற்றும் தோழமை சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

பணிப் பாதுகாப்புச் சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம், வருவாய்த்துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம், கிராம நிா்வாக அலுவலா்களுக்கு கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்தக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 1500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.