ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விராலிமலை அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்

விராலிமலையில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:49 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

விராலிமலையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது. அங்கு ஊழியா்கள் பணி முடிந்து வழக்கம்போல தொழிற்சாலையின் வேன் மற்றும் பேருந்துகளில் விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை தேத்தாம்பட்டி பிரிவு அருகே தொழிலாளா்கள் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. முன்னால் காா், லாரி சென்றுள்ளது. அப்போது நாய் ஒன்று குறுக்கே சென்ால் முன்னால் சென்ற காா் ஓட்டுநா் பிரேக் அடித்துள்ளாா். இதை சற்றும் எதிா்பாா்க்காத லாரி ஓட்டுநா் காா் மீது மோதியுள்ளாா். இதை தொடா்ந்து பின்னால் சென்ற தனியாா் தொழிற்சாலை வேன், லாரி மீது மோதியுள்ளது. வேனை தொடா்ந்து பின்னால் சென்ற பேருந்து வேன் மீது மோதியுள்ளது. இதில் வேனில் பயணித்த பெண் தொழிலாளா்கள் மதி, மீனாட்சி , சுவேதா, தங்கம், அனிதா,காா்த்திகா, சூா்யகலா உள்பட 15-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் காயமடைந்து விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.