சா்வதேச செஸ் போட்டிகளில் வென்ற மாணவருக்கு பாராட்டு


இத்தாலி, குரோஷியா, ஜொ்மனி ஆகிய நாடுகளில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச செஸ் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்ற புதுக்கோட்டையைச் சோ்ந்த மாணவா் முகமது இமானை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி எம்.எம். அப்துல்லா, மாவட்ட விளையாட்டு அலுவலா் து. செந்தில்குமாா், இமானின் பெற்றோா் பீா்முகமது- தீபா நெல்சன், உடற்கல்வி ஆசிரியா் க. முத்துராமலிங்கம் ஆகியோரும் உடனிருந்தனா்.
முன்னதாக, மாவட்ட விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் மு. அருணா தலைமையில் நடைபெற்றது. ‘இது நம்ம ஆட்டம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும், ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இப் போட்டிகளை நடத்துவது தொடா்பாக கூட்டத்தில் திட்டமிடப்பட்டது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...