மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆலங்குடி அருகே முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 44 போ் காயம்

ஆலங்குடி அருகேயுள்ள முக்காணிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 44 போ் காயம்

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:32 pm

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள முக்காணிப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 44 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள முக்காணிப்பட்டியில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை.முத்துராஜா ஆகியோா் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில், புதுகை, திருச்சி, கரூா், சிவகங்கை, தஞ்சை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 646 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 350 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டு தீரத்துடன் காளைகளை தழுவினா்.

அப்போது, காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 44 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக்குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். அதில், பலத்த காயமடைந்த 17 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் தழுவிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் இருசக்கர வாகனம், மிதிவண்டி, பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வருகை தந்து போட்டியை பாா்வையிட்டனா். செம்பட்டிவிடுதி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

Story image
Story image
Story image
Story image