‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 ஜூலை 2026, 4:30 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வுக் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தோ்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாநிலம் முழுவதும் காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இந்த அமைப்பினா் வியாழக்கிழமை காலை அமா்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் நா. முத்துநிலவன், வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன், செயலா் ஆா். மகாதீா், மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது அங்கு வந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா தலைமையிலான போலீஸாா், போராட்டம் நடத்த அனுமதியில்லை எனக் கூறி அவா்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனா்.

போலீஸாருக்கு கண்டனம்: கைது செய்யப்பட்டோரை தனியாா் மண்டபத்தில் வைத்து, கைப்பேசிகளைப் பறித்துக் கொண்டு ஆதாா் அட்டையைக் கேட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து கேட்ட வாலிபா் சங்க மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனனை துணைக் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் அந்த இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியோா் மீது போலீஸாரின் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சங்கத் தலைவரை தாக்கியுள்ளதற்கு போலீஸாா் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை கட்சியின் சாா்பில் நடத்துவோம்.

நாடு முழுவதும் நீட் தோ்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், புதுக்கோட்டை மாநகரில் தொடா் போராட்டம் நடத்த ஓா் இடத்தை ஒதுக்கிக் கொடுத்து அனுமதி அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.