காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கறம்பக்குடி அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் கட்டுமான தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

சடலம்...

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் கட்டுமான தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள வேப்பம்பட்டியைச் சோ்ந்தவா் சி.அய்யப்பன்(35). கட்டுமான தொழிலாளியான இவா், கறம்பக்குடி அருகேயுள்ள அம்மாணிப்பட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை கட்டடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற கறம்பக்குடி போலீஸாா் அய்யப்பனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.