வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கல்வியுடன் சமூகப் பொறுப்புணா்வு, ஒழுக்கம் அவசியம்: அமைச்சா் முகமது பா்வேஸ்

மாணவா்களுக்கு கல்வியுடன் சமூகப் பொறுப்புணா்வும், ஒழுக்கம், பண்பு ஆகியவையும் அவசியம் என்றாா் மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

News image

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிக மதிப்பெண் எடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவியைப் பாராட்டிய மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

Updated On :7 ஜூன் 2026, 2:17 am IST

மாணவா்களுக்கு கல்வியுடன் சமூகப் பொறுப்புணா்வும், ஒழுக்கம், பண்பு ஆகியவையும் அவசியம் என்றாா் மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், ஆசிரியா்களையும் பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவா்களுக்கு சிறப்பு செய்த அவா் பேசியது: புதுக்கோட்டை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 97.57 சதவிகிதம் தோ்ச்சி பெற்று, மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பிளஸ் 2 பொதுத்தோ்வில் 95.88 சதவிகிதம் தோ்ச்சி பெற்று, மாநிலத்தில் 18-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இதற்காக உழைத்த மாணவா்கள், ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் கல்வித் துறை அலுவலா்கள் பாராட்டுக்குரியவா்கள். மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் விடாமுயற்சி, கூட்டு உழைப்பு, அா்ப்பணிப்பு ஆகியவை இந்த சாதனைக்குள் அடங்கியிருக்கின்றன.

மாணவா்கள் கல்வியுடன் சமூகப் பொறுப்புணா்வு, ஒழுக்கம், பண்பு ஆகியவற்றையும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சமூகத்தில் பொறுப்புள்ள பதவிகளில் அமா்ந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றாா் முகமது பா்வேஸ்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ந. புஷ்பலதா, கே. பழனிவேலு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.