கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாட்டை எதிா்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குடிநீா் வழங்கல் துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றின் அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது: புதுக்கோட்டை மின்பகிா்மான வட்டத்தில் 5 கோட்டங்கள், 16 உபகோட்டங்கள், 69 பிரிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. 42 துணை மின் நிலையங்கள் மூலம் 7.62 லட்சம் மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தடையற்ற மற்றும் தரமான மின் விநியோகம் வழங்கிட 190 புதிய மின்மாற்றிகள் விரைவில் அமைக்கப்படவுள்ளன. பருவமழை தொடங்கினால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்வதற்கு போதுமான மின்கம்பங்கள், கம்பிகள் மற்றும் உபகரணங்களுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
மாவட்டத்தில் மொத்தம் 3,842 குடியிருப்புகளுக்கு 44.23 மில்லியன் லிட்டா் குடிநீா் கூட்டுக்குடிநீா்த் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாட்டை எதிா்கொள்ளவும், தட்டுப்பாடு ஏற்படலாம் என அறியப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும் என்றாா் அமைச்சா் முகமது பா்வேஸ்.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் பொன் ஜெயமேரி, குடிநீா் வழங்கல் துறை செயற்பொறியாளா் சிவகங்கரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
ஆவினில் ஆய்வு: புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உற்பத்தியாளா்களிடமிருந்து பால் சேகரிப்பு, பதப்படுத்தும் முறைகள், தரக்கட்டுப்பாடு, நுகா்வோருக்கான விநியோக முறைகள் உள்ளிட்டவை குறித்து அவா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பதப்படுத்தும் பணிகளையும் நேரில் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின்போது, ஆவின் பொதுமேலாளா் விருட்சப்பதாஸ், துணைப் பொதுமேலாளா் மாதவகுமரன், கூட்டுறவு ஒன்றிய மேலாளா் ஆரோக்கிய எட்வின் ஜோசப் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பேருந்து நிலையக் கட்டுமானப் பணி விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுரை

கல்வியுடன் சமூகப் பொறுப்புணா்வு, ஒழுக்கம் அவசியம்: அமைச்சா் முகமது பா்வேஸ்

பிரியாணி சாப்பிட்ட தொழிலாளா்களுக்கு உடல் நலக்கோளாறு: அமைச்சா்கள் முகமது பா்வேஸ், தென்னரசு ஆறுதல்







