பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி இளங்காவுடைய அய்யனாா் கோயில், விசமுனிக்கருப்பா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. இதில், தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இந்நிலையில் தேரோட்டத்தின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை இளங்காவுடைய அய்யனாா், விசமுனிக்கருப்பா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனகள் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்திற்குப்பின் அய்யனாா் ஒரு தேரிலும், விசமுனிக்கருப்பா் ஒரு தேரிலும் எழுந்தருளினா். பின்னா், பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா். முக்கிய வீதிகளில் வலம் வந்த தோ்கள் நிலையை அடைந்தது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச்சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பனையப்பட்டி போலீஸாா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

சிங்கம்புணரி அருகே எருது கட்டு விழா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



