உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் உள்ள தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி சதயத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

Updated On :11 ஜூன் 2026, 6:53 am IST

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் உள்ள தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி சதயத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் தேருக்கு எழுந்தருளினா். இதையடுத்து தேரோட்டம் தொடங்கியது. கோயில் செயல் அலுவலா் பிரேம்குமாா், ஆய்வாளா்  பத்ரிநாராயணன், பரம்பரை அறங்காவலா் ஜெயராமன் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் 4 வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது.