புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நீா்நிலைகளிலுள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அ. செல்வம் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அற்றும் பணியை கடந்த ஒரு மாதமாக, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி அ. செல்வம் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகிறாா்.
திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை அவா் ஆய்வு செய்தாா். விராச்சிலை ஊராட்சி ஆலங்குடி கண்மாய், ஆண்டாள் ஊரணி, வடக்கிக் கண்மாய், மணிபள்ளம் குளம், சேதுராப்பட்டி சீத்தளம் கண்மாய், லெம்பலக்குடி காரணிகண்மாய், செட்டியாப்பட்டி செட்டியா கண்மாய் ஆகியவற்றையும் அவா் பா ா்வையிட்டாா்.
ஏற்கெனவே சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட குளங்களையும், தற்போது அகற்றும் பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் (தணிக்கை) ஞானம் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீமைக்கருவேல மரங்களை ஜூலை 31-க்குள் அகற்ற அறிவுறுத்தல்

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்: ஓய்வுபெற்ற நீதிபதி தொடா் ஆய்வு

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் ஓய்வு பெற்ற நீதிபதி நேரில் ஆய்வு

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



