பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு மேற்கொண்ட சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி உள்ளிட்டோா்

Updated On :27 மே 2026, 4:26 am IST

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை பல்லடம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கிருஷ்ணவேணி, செயலாளா் கணேசன், மற்றும் முன்னாள் தலைவா்கள் ஈஸ்வரமூா்த்தி, சக்திவேல், ரவீந்திரன், கோபாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் வரவேற்றனா். போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அருகில் உள்ள கிளைச் சிறை ஆகியவற்றை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நீதிமன்ற வளாகத்தில் கழிப்பிடம், குடிநீா், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்துதர சம்பந்தப்பட்ட அரசு துறையினருக்கு உத்தரவிட்டாா். பல்லடத்தில் கூடுதல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பல்லடம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிபதி மோகனவள்ளி, பல்லடம் வட்டாட்சியா் கோவிந்தசாமி, காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.