பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம்: புதுகை ஆட்சியா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதி 1,356 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

News image

போலியோ சொட்டு மருந்து முகாம்

Updated On :26 ஜூன் 2026, 4:17 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதி 1,356 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறவுள்ளது.

இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட 1,356 மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்தப் பணியில், அரசு சுகாதாரப் பணியாளா்களுடன் தன்னாா்வலா்கள் உள்பட சுமாா் 5,596 போ் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

ஏற்கெனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டிருந்தாலும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்த முகாமிலும் போலியோ சொட்டு மருந்து புகட்டிக் கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.