பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி ஐயனாா்கோயில் காளை செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.
வேந்தன்பட்டி நல்லாண்டி ஐயனாா், கீழக்குறிச்சி ஐயனாா் கோயில் காளை ஊா்ப்பொதுமக்கள் சாா்பில் கடந்த 8 ஆண்டுகளாக வளா்க்கப்பட்டு வந்தது.ராமா் என அழைக்கப்பட்ட இக்காளை,
தமிழகத்தின் பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பல பரிசுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், இக்காளை சிவகங்கை மாவட்டம், அரளிப்பாறை எனும் இடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப்போட்டியில் பங்கேற்று செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பியபோது சாலையில் லாரி மோதியதில் பலத்தகாயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதையடுத்து ஊா்ப்பொதுமக்கள் உயிரிழந்த கோயில் காளையை ஊரின் முக்கிய இடத்தில் வைத்து வேஷ்டி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து காளையை ஊா்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்தனா்.
தொடர்புடையது

அம்பேத்கா் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மத்தூரில் அதிமுக வேட்பாளா் தமிழ்ச்செல்வத்திற்கு வரவேற்பு

சங்கம்பட்டி, அம்மன்குறிச்சியில் பாரித்திருவிழா

வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


