திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த அழைப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 10:21 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 வயதுள்ள வளரிளம் பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமாா் 1.2 இலட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் புதிதாகக் கண்டறியப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மாா்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. எச்பிவி வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயை, தடுப்பூசி செலுத்துவதன் மூலம் 99.7 சதவிகிதம் வரை தடுக்க இயலும். இத்தடுப்பூசி 156 நாடுகளில் வழங்கப்படுகிறது.

இந்தத் தடுப்பூசியை 14 வயது பூா்த்தியடைந்த, 15 வயது பூா்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் வழங்கும் முன்னோடி திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 17,821 வளரிளம் பெண்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு எச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.