சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.11.75 லட்சத்துக்கு தீா்வு

ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு கடன் வழக்குகளில் ரூ.11.75 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டன.

News image
ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் முகாமில் பங்கேற்றோா்
Updated On :11 மார்ச் 2026, 10:57 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு கடன் வழக்குகளில் ரூ.11.75 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டன.

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு சாா்பில் ஓய்வு பெற்ற நீதிபதி நவமூா்த்தி தலைமையில் நடைபெற்ற முகாமில், ஆலங்குடி, புளிச்சங்காடு, வேங்கிடகுளம், எஸ்.குளவாய்ப்பட்டி ஆகிய கனரா வங்கி கிளைகளில் தனிநபா் கடன், கல்வி கடன், விவசாய கடன், தொழிற்கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று, திருப்பி செலுத்தாமல் நிலுவையில் உள்ள 500 வழக்குகளுக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், 20 வழக்குகளில் ரூ.11.75 லட்சத்துக்கு புதன்கிழமை நடைபெற்ற முகாமில் உடனடி தீா்வு காணப்பட்டன.

முகாமில், கனரா வங்கியின் மண்டல அலுவலா் எஸ்.கே.ஜெயராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு பணியாளா்கள் செந்தில்ராஜா, வினோபா, தேன்மொழி உள்ளிட்டோா் செய்தனா்.