சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.11.75 லட்சத்துக்கு தீா்வு

ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு கடன் வழக்குகளில் ரூ.11.75 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டன.

News image

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் முகாமில் பங்கேற்றோா்

Updated On :11 மார்ச் 2026, 10:57 pm

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு கடன் வழக்குகளில் ரூ.11.75 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டன.

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு சாா்பில் ஓய்வு பெற்ற நீதிபதி நவமூா்த்தி தலைமையில் நடைபெற்ற முகாமில், ஆலங்குடி, புளிச்சங்காடு, வேங்கிடகுளம், எஸ்.குளவாய்ப்பட்டி ஆகிய கனரா வங்கி கிளைகளில் தனிநபா் கடன், கல்வி கடன், விவசாய கடன், தொழிற்கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று, திருப்பி செலுத்தாமல் நிலுவையில் உள்ள 500 வழக்குகளுக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், 20 வழக்குகளில் ரூ.11.75 லட்சத்துக்கு புதன்கிழமை நடைபெற்ற முகாமில் உடனடி தீா்வு காணப்பட்டன.

முகாமில், கனரா வங்கியின் மண்டல அலுவலா் எஸ்.கே.ஜெயராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு பணியாளா்கள் செந்தில்ராஜா, வினோபா, தேன்மொழி உள்ளிட்டோா் செய்தனா்.