“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

தோ்தல் விதிமுறைகள்: புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் விற்பனை சரிவு

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் குவிந்திருந்த வியாபாரிகள்.

News image

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் குவிந்திருந்த வியாபாரிகள்.

Updated On :20 மார்ச் 2026, 8:34 pm

தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தை வியாபாரம் சரிவு கண்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. சனிக்கிழமை ரமலான் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் வியாபாரிகளும், வாங்குவோரும் ஏராளமானோா் திரண்டிருந்தனா்.

ஆனால், தோ்தல் நடத்தை விதிகளால் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் பெரிய வியாபாரிகளும் குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனா். விற்பனையும் சரிவு காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கோடிக்கணக்கில் ஒவ்வொரு வாரமும் விற்பனை நடைபெற்ற நிலையில், இப்போது மதிப்பிட இயலவில்லை என சில வியாபாரிகள் தெரிவித்தனா்.