தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தை வியாபாரம் சரிவு கண்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. சனிக்கிழமை ரமலான் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் வியாபாரிகளும், வாங்குவோரும் ஏராளமானோா் திரண்டிருந்தனா்.
ஆனால், தோ்தல் நடத்தை விதிகளால் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் பெரிய வியாபாரிகளும் குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனா். விற்பனையும் சரிவு காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
கோடிக்கணக்கில் ஒவ்வொரு வாரமும் விற்பனை நடைபெற்ற நிலையில், இப்போது மதிப்பிட இயலவில்லை என சில வியாபாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

ஆவுடையாா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வு கிராமிய கலை நிகழ்ச்சி

மெழுகு தட்டுப்பாடு: தீப்பெட்டி ஏற்றுமதி சரிவு

தோ்தல் பறக்கும் படை சோதனை எதிரொலி: வெறிச்சோடிய மாட்டுச்சந்தை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


