முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

சமையல் எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்களைப் பாதிக்கும் வகையில் வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வு, ரயில்வே பணியிடங்களில் ஆட்குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சியினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சிகள்.

Updated On :8 மே 2026, 5:27 am IST

மக்களைப் பாதிக்கும் வகையில் வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வு, ரயில்வே பணியிடங்களில் ஆட்குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சியினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் த. செங்கோடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் சுசிலா கணேசன், சிபிஐ (எம்எல்- விடுதலை) கட்சியின் மாவட்டச் செயலா் சி. ரெங்கசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் முத்து. உத்திராபதி, சிபிஐ (எம்எல்) மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வீ.மு. வளத்தான், விசிக மாவட்டச் செயலா்கள் க. செந்தமிழ்ச் செல்வன், சரஸ்வதி நடராஜன், அ. தமிழ்த்தேசியன், ச. அம்பேத்வளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.