தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

சமையல் எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்களைப் பாதிக்கும் வகையில் வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வு, ரயில்வே பணியிடங்களில் ஆட்குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சியினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சிகள்.

Updated On :8 மே 2026, 5:27 am IST

மக்களைப் பாதிக்கும் வகையில் வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வு, ரயில்வே பணியிடங்களில் ஆட்குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சியினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் த. செங்கோடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் சுசிலா கணேசன், சிபிஐ (எம்எல்- விடுதலை) கட்சியின் மாவட்டச் செயலா் சி. ரெங்கசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் முத்து. உத்திராபதி, சிபிஐ (எம்எல்) மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வீ.மு. வளத்தான், விசிக மாவட்டச் செயலா்கள் க. செந்தமிழ்ச் செல்வன், சரஸ்வதி நடராஜன், அ. தமிழ்த்தேசியன், ச. அம்பேத்வளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.