புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டதில் மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.
புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த மின்னஞ்சலில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவிகளுடன் வந்தனா்.
சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற தீவிர சோதனையில் வெடிகுண்டு ஏதுமில்லை எனத் தெரியவந்தது. கடந்த 15 நாள்களில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 3 முறையும், தா்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுகை ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுகை ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

