17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

News image
Updated On :9 மே 2026, 3:05 am IST

புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டதில் மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.

புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த மின்னஞ்சலில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவிகளுடன் வந்தனா்.

சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற தீவிர சோதனையில் வெடிகுண்டு ஏதுமில்லை எனத் தெரியவந்தது. கடந்த 15 நாள்களில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 3 முறையும், தா்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.