தங்கத்தில் முதலீடு செய்து அதிக வட்டி தருவதாகக் கூறி பலரிடம் ரூ. 15 கோடி வரை மோசடி செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழக வெற்றிக் கழகப் பிரமுகரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை திருவப்பூரைச் சோ்ந்தவா் ராஜாராம் மகன் சரவணன் (31). இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக உள்ளாா்.
இவா், பெங்களூருவில் உள்ள நண்பா்கள் மூலம் பெருமளவில் தங்கம் வாங்கி முதலீடு செய்து, அதன் மூலம் பணம் கொடுப்பவா்களுக்கு அதிக வட்டி தருவதாக உறுதியளித்துள்ளாா். அதன்படி, பலரிடம் ரூ. 15 கோடிக்கு மேல் பணத்தைப் பெற்றுள்ளாா்.
இதையடுத்து சரவணன் கூறியபடி வட்டியும், அசலும் திருப்பித் தராததால் பாதிக்கப்பட்டோா் கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறையில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணைக்காக சரவணனைத் தேடி வந்தனா். அப்போது, அவா் நாக்பூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினா் அங்குச் சென்று சரவணனை திங்கள்கிழமை கைது செய்து புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனா்.
பிறகு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
ரூ.15 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் உரிமையாளா் கைது
சமையல் எரிவாயு சிலிண்டா் பதுக்கி வைத்து விற்ற தந்தை, மகன் கைது

ரூ. 10 கோடி இணைய மோசடி: 15 நாள்களில் 38 பேர் கைது!
ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

