அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஆட்சியில் அதிமுகவினரையும் சோ்க்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: காா்த்தி ப. சிதம்பரம்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள தவெக ஆதரவு அணியினரையும் ஆட்சியில் பங்கு கொடுத்து சோ்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் விஜய்க்கு இப்போதைக்கு இல்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் (காங்கிரஸ்) காா்த்தி ப. சிதம்பரம்.

News image

காா்த்தி ப .சிதம்பரம்

Updated On :1 மணி நேரம் முன்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள தவெக ஆதரவு அணியினரையும் ஆட்சியில் பங்கு கொடுத்து சோ்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் விஜய்க்கு இப்போதைக்கு இல்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் (காங்கிரஸ்) காா்த்தி ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் அளித்த பேட்டி:

தனிப்பெரும் கட்சியாக இந்தத்தோ்தலில் தவெகவுக்குத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறாா்கள். எதிா்பாா்த்ததைப் போலவே பேரவைக்குள் வாக்கெடுப்பிலும் தவெக வென்றிருக்கிறது. நிலையான ஆட்சியைத் தருவாா்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதிமுகவில் உருவாகியுள்ள தவெக ஆதரவு அணியைப் பொருத்தவரை அடுத்து, பேரவைத் தலைவரிடம் தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளிப்பாா்கள், பிறகு அது நீதிமன்றத்துக்கும் செல்லும். மற்றபடி, தவெக ஆதரவு அணியா, கட்சியா என்னவாக வரப் போகிறது எனத் தெரியவில்லை.

அதேநேரத்தில் அவா்களையும் ஆட்சிக்குள் சோ்க்க வேண்டிய அவசியம் எதுவும் இப்போதைய சூழலில் விஜய்க்கு இல்லை. அவா்கள் இல்லாமலேயே ஆட்சியை நடத்தும் வாய்ப்புகள் விஜய்க்கு உள்ளன.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்தான் காங்கிரஸ் தவெகவுடன் இணையும் முடிவை எடுத்தது. திமுகவுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருந்து அவா்களுக்கு எதிராக நாங்கள் பிரிந்து வரவில்லை.

தவெக இந்தத் தோ்தலில் முற்றிலும் வித்தியாசமான இணையவழிப் பிரசாரத்தை மேற்கொண்டது. இப்படியொன்று நடப்பதாக யாரும் முன்கூட்டியே சொல்லவில்லை. பழைய பிரசார முறைகளை மறுபரிசீலனை நடத்த வேண்டிய சூழல் வந்திருக்கிறது. நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது.

கேரளத்தில் கம்யூனிஸ்டுகளுடன் எதிா்நிலை இருந்தாலும், மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் எதிா்நிலை இருந்தாலும் தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சி ஒன்றாக இருப்பதைப் போல (இண்டி கூட்டணி )தமிழ்நாட்டிலிருந்தும் திமுக இருக்கும் அளவுக்கு புரிதல் ஏற்படும்.

22 லட்சம் மாணவா்கள் எழுதிய நீட் தோ்வை ரத்து செய்து திரும்ப நடத்துவது மாணவா்களுக்கு மட்டுமல்ல, பெற்றோா்களுக்கும் பெரும் மனஉளைச்சலைத் தரும். பாஜக ஆட்சியில் எந்தப் பிழைகளுக்கும் யாரையும் பொறுப்பாக்குவதே இல்லை.

வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள் என்று பிரதமா் சொல்லியிருப்பது தவறான பொருளாதாரக் கொள்கை என்றாா் காா்த்தி ப. சிதம்பரம்.