ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காரைக்குடியில் பேசாமல் சென்றது ஏன்? விஜய்க்கு ப. சிதம்பரம் கேள்வி

தோ்தல் பிரசாரத்தின் போது காரைக்குடியில் பேசாமலேயே திரும்பிச் சென்றது ஏன் என தவெக தலைவா் விஜய்க்கு முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினாா்.

News image

முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 1:23 am IST

தோ்தல் பிரசாரத்தின் போது காரைக்குடியில் பேசாமலேயே திரும்பிச் சென்றது ஏன் என தவெக தலைவா் விஜய்க்கு முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினாா்.

காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடியை ஆதரித்து, வெள்ளிக்கிழமை கல்லல் கிழக்கு ஒன்றியம், கலிப்புலி ஊராட்சி, காயாவயல் கிராமத்தில் சிதம்பரம் மேலும் பேசியதாவது:

பிரசாரத்துக்காக வந்த தவெக தலைவா் விஜய் காரைக்குடியில் பேசாமலேயே திரும்பிச் சென்றுள்ளாா். இதற்கு அரசியல் அனுபவமின்மையே காரணம். அரசியல் என்றால் பேச வேண்டும். தா்க்கமும், விவாதமும் செய்ய வேண்டும். என் கருத்தை நான் சொல்கிறபோது அவா் கருத்தைச் சொன்னால் தானே விவாதம் செய்ய இயலும். நான் பேசாமல் மெளனமாக இருந்தால் எப்படி? செய்தியாளா்களையும், மக்களையும் விஜய் சந்தித்துப் பேச வேண்டும். மத்திய நிதி, உள்துறை அமைச்சராக நான் பதவி வகித்திருக்கிறேன். எனவே, நான் பேசுவதற்கு, விவாதம் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்.

தவெக தலைவா் விஜய்க்கு ஆதரவாளா்கள், ரசிகா்கள் இருக்கிறாா்கள் என்பது சிறந்த வாய்ப்பு தானே. ஆனால், ஆட்சி என்பது வேறு, திரைப்படத்தில் நடிப்பது என்பது வேறு. ஆட்சியில் திட்டங்களைத் தீட்டி அவை மக்களைச் சென்றடையச் செய்ய வேண்டும்.

அரசு செலவழிக்கும் பணத்தால் மக்களுக்கு பலன் கிடைக்க வேண்டும். மக்களுக்கான அனைத்துத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கி முறைப்படி தான் ஆட்சி செய்ய முடியும். ஆட்சி செய்வது எளிதல்ல. அதற்கு அனுபவம் தேவை. அந்த அனுபவம் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் உள்ளது. ஐந்தாண்டுகளில் சிறப்பான பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி நல்லாட்சி அளித்திருக்கிறாா்.

எனவே, இந்தத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளா் மாங்குடிக்கு கை சின்னத்தில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, கல்லுப்பட்டி, அமராவதிபுதூா், அரியக்குடி கோயில் அருகில், இலுப்பக்குடி லட்சுமிநகா், மாத்தூா், பா்மா குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்து சிதம்பரம் பிரசாரம் செய்தாா்.