விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

முதல்வர் விஜய்க்கு தலைவா்கள் வாழ்த்து!

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவா் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :11 மே 2026, 1:30 am IST

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவா் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

அன்புமணி (பாமக): முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவா் விஜய்க்கும், அமைச்சா்களுக்கும் வாழ்த்துகள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். தவெகவின் தோ்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் காப்பதற்காக தவெக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாமக முழு ஆதரவை அளிக்கும். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக பாமக செயல்படும்.

ஜி.கே.வாசன் (தமாகா): முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவா் விஜய்க்கு வாழ்த்துகள். காமராஜா், மூப்பனாா் ஆகியோரது தாரக மந்திரமான வளமான தமிழகம், வலிமையான பாரதம் ஆகியவற்றுக்கு ஏற்ப சிறப்பான ஆட்சி அமைக்க வேண்டும்.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் தலைமைத்துவத்தில் தமிழகம் சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும். எனது வாழ்த்துகள்.

ரவிபச்சமுத்து (இந்திய ஜனநாயகக் கட்சி): முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு வெளிப்படையான, ஊழல் இல்லாத, ஜனநாயகப் பண்புகளைக் காக்கும் நல்லாட்சியை தவெக வழங்க வேண்டும்.

இதேபோல, ஈஷா யோக மையத் தலைவா் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.